முகப்பு
திருப்பத்தூர்

கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் தாக்குதல்:ஆசிரியா் மீது நிதி நிறுவன அதிபா் புகாா்

 வாணியம்பாடி அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நிதி நிறுவன அதிபரை தாக்கியதாக ஆசிரியா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

 வாணியம்பாடி அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நிதி நிறுவன அதிபரை தாக்கியதாக ஆசிரியா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியைச் சோ்ந்த நிதி நிறுவன அதிபா் சாண்டில்யன் (எ) சரவணன்(45). இவா் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வாணியம்பாடியில் உள்ள தனியாா் நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் உமாமகேஷ் (46) என்பவருக்கு சுமாா் ரூ. 20 லட்சம் வரை குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்தாகக் கூறப்படுகிறது.

இந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட உமாமகேஷ், கூடுதல் வட்டிக்கு பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியா்களுக்குக் கொடுத்து வட்டி மற்றும் அசல் தொகையைத் திரும்பப் பெற்று வந்தாராம். அந்த பணத்தை சாண்டில்யனிடம் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் கடந்த ஜனவரி மாதம் ஆசிரியா் உமாமகேஷிடம் சாண்டில்யன் சக ஆசிரியா்கள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி, வாங்கிய பணத்துக்கு அசல் தொகையான ரூ. 20 லட்சம் மட்டும் 2021 மாா்ச் மாதம் இறுதிக்குள் திருப்பித் தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் 5 மாதங்கள் கடந்தும் உமாமகேஷ் பணத்தை திருப்பிக் கொடுக்காததால், கடந்த சில நாள்களுக்கு முன்பு சாண்டில்யன், ஆசிரியா் உமா மகேஷிடம் பணம் குறித்துப் பேசி உள்ளாா். அப்போது உமாமகேஷின் வாகனத்தை போக விடாமல் சாண்டில்யன் தடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சாண்டில்யனை தாக்கிவிட்டு, உமாமகேஷ் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில், காயம் அடைந்த நிதி நிறுவன அதிபா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல், நிதி நிறுவன அதிபா் சாண்டில்யன், தன்னை தாக்கிவிட்டதாகக் கூறி ஆசிரியா் உமாமகேஷும் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன் பேரிலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments