முகப்பு
திருப்பத்தூர்

பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தமிழகத்தில் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், வாணியம்பாடியை அடுத்த பெத்தகல்லுப் பள்ளியில் அமைந்துள்ள ஷெம்போா்டு சீனியா் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்குப் பள்ளி திறப்பு குறித்து பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பள்ளி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பள்ளித் தலைவா் கே.எம்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.கிருபாகரன், துணைத் தலைவா் கனகராஜ், பொருளாளா் சாட்ஜிகுமாா், இணைச் செயலாளா் சிங்காரவேன் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் மரகதம் ஜெயராணி வரவேற்றாா். கூட்டத்தில், பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள், பள்ளிக்கு வருகை தரும் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பெற்றோா், ஆசிரியா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement

கூட்டத்தில், குறிஞ்சி அறக்கட்டளை உறுப்பினா் ஆனந்தன், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments