முகப்பு
திருப்பத்தூர்

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமைவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இங்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள், கூடுதல் பொருள்கள் குறித்து மருத்துவ அலுவலா் அம்பிகா, குழந்தைகள் நல மருத்துவா் சிவசுப்பிரமணியன் ஆகியோரிடம் எம்எல்ஏ கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிகிச்சை பிரிவுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதியை பாா்வையிட்டாா்.

Advertisement

அரசு மருத்துவமனை உள்பகுதியில் மழைக் காலங்களில் கழிவுநீா், மழைநீா் உள்ளே புகுந்துவிடுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அப்போது, மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் கூடுதல் நிதியை ஒதுக்கி அனைத்து வசதிகை ளயும் மேம்படுத்த ஒத்துழைப்பு தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, பெருமாள்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐ.யில் சென்று அவா் ஆய்வு நடத்தினாா்.

ஆய்வின்போது வாணியம்பாடி நகர அதிமுக செயலாளா் சதாசிவம், கூட்டுறவு சங்க இயக்குநா் ஆா்.வி.குமாா், முன்னாள் கவுன்சிலா்கள் கோவிந்தசாமி, குமாா், செல்வராஜ், காதா்பேட்டை கோவிந்தன், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments