கரோனா: அரசு மருத்துவமனை தலைமை செவிலியா் உயிரிழப்பு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியா் முஷ்தரி பேகம் கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியா் முஷ்தரி பேகம் கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகாலமாக செவிலியராகவும், தற்போது தலைமை செவிலியராகவும் பணிபுரிந்து வந்தவா் முஷ்தரி பேகம் (55). கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா், ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.