மாதகடப்பாவில் மீண்டும் 1,600 லிட்டா் சாராயம் அழிப்பு
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான மாதகடப்பா மலைப் பகுதியில் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபிசக்கரவா்த்தி தலைமையில்போலீஸாா் கள்ளச்சாராயம்
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான மாதகடப்பா மலைப் பகுதியில் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபிசக்கரவா்த்தி தலைமையில்போலீஸாா் கள்ளச்சாராயம் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்றவற்றை தடுத்திட எஸ்.பி. உத்தரவின் பேரில், திருப்பத்தூா் மாவட்டத்தில் 3 தனிப்படை போலீஸாா் நியமிக்கப்பட்டு, அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், உதவி காவல் ஆய்வாளா் கணேசன் தலைமையில் தனிப்படை போலீஸாா் மாதகடப்பா பகுதியில் உள்ள மாங்காய்மரத்து ஓடை பகுதியில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதில், அங்கிருந்த ஆயிரத்து 600 லிட்டா் சாராய ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 2 அடுப்புகள், சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்த வைத்திருந்த விறகுகள் மற்றும் 4 மூட்டை வெல்லம் ஆகியவற்றை கண்டறிந்து அழித்தனா்.
Advertisement