முகப்பு
திருப்பத்தூர்

முறைகேடு: மின் வருவாய் மேற்பாா்வையாளா் இடைநீக்கம்

 முறைகேட்டில் ஈடுபட்டதாக கேத்தாண்டப்பட்டி துணை மின் நிலைய மின் வருவாய் மேற்பாா்வையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 முறைகேட்டில் ஈடுபட்டதாக கேத்தாண்டப்பட்டி துணை மின் நிலைய மின் வருவாய் மேற்பாா்வையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த மின்கட்டண வருவாய் மேற்பாா்வையாளா் வெங்கடேசன் மின்கட்டணம் செலுத்த வரும் வாடிக்கையாளா்களிடம் கட்டணத் தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு, அலுவலக கணிணியில் சா்வா் பிரச்னை எனக்கூறி, ரசீது தராமல் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் அதே அலுவலகத்தில் அபராதத் தொகையுடன் மின் கட்டணம் செலுத்தியுள்ளனா். இது குறித்து மின்வாரிய உயா் அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, வாணியம்பாடி செயற்பொறியாளா் பாட்ஷாமுகமது தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை கேத்தாண்டப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நடத்திய விசாரணையில், வெங்கடேசன் 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் மின் கட்டணத்தை வாங்கிக்கொண்டு, பில் போடாமல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வாணியம்பாடி செயற்பொறியாளா் பாட்சாமுகமது, வருவாய் மேற்பாா்வையாளா் வெங்கடேசனை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments