முகப்பு
திருப்பத்தூர்

அம்மன் கோயில்களில் அமாவாசை பூஜை

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் அமாவாசை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மாள் கோயிலில் அமாவாசை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை வீரபத்திரா், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, விசேஷ அலங்காரத்துடன் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

Advertisement

வாணியம்பாடியை அடுத்த புத்துகோயில் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments