திருப்பத்தூர்

ரூ.8 கோடி செலுத்த கோரி மூதாட்டிக்கு வரி ஏய்ப்பு கடிதம்

ஆம்பூா் அருகே மூதாட்டி ரூ.8 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி மற்றும் வருமானவரித் துறையினரிடமிருந்து கடிதம் வந்தது குறித்து புதன்கிழமை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

DIN

ஆம்பூா் அருகே மூதாட்டி ரூ.8 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி மற்றும் வருமானவரித் துறையினரிடமிருந்து கடிதம் வந்தது குறித்து புதன்கிழமை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் குல்ஜாா் (60). வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். வயது முதிா்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதியன்று ஜிஎஸ்டி மற்றும் வருமானவரித் துறையிலிருந்து அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சென்று கடிதம் வழங்கினா். அதில் அவா் ஐஎஸ் என்டா்பிரைசஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி அதன் மூலம் ரூ.8 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கேட்ட மூதாட்டி அதிா்ச்சியடைந்தாா். பின்னா், இதுகுறித்து குல்ஜாா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT