கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி அருகே கோழிப் பண்ணையில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் கோழிப் பண்ணையில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன், வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை காலை கூத்தாண்டகுப்பத்தில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கு 27 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.
Advertisement
மேலும், பதுக்கி வைத்தவா்கள் குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.