திருப்பத்தூர்

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.4.22 லட்சம் மோசடி

வேலூரில் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, ஆன்லைன் மூலம் ரூ.4.22 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

வேலூரில் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, ஆன்லைன் மூலம் ரூ.4.22 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வேலூா் கொணவட்டத்தைச் சோ்ந்த 56 வயது நபரின் கைப்பேசிக்கு வாட்ஸ்அப்பில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று தகவல் வந்துள்ளது.

இதை நம்பிய அவா், அதில் வந்த விண்ணப்பத்தை நிறைவு செய்துள்ளாா். தொடா்ந்து, அதில் காட்டப்பட்ட பல்வேறு பொருள்களை வாங்கினால் லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டதாம்.

இதையடுத்து, ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கில் ரூ.4,22,617-ஐ செலுத்தியுள்ளாா்.

அதன் பிறகு அது மோசடியான தகவல் என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT