குண்டும், குழியுமாக உள்ள திருப்பத்தூா்-சேலம் அணுகு சாலை. 
திருப்பத்தூர்

சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திருப்பத்தூரில் உள்ள சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

DIN


திருப்பத்தூா்: திருப்பத்தூரில் உள்ள சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருப்பத்தூா்-ஊத்தங்கரை பிரதான நான்கு வழிச்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் போடப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே சில இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

மேலும், திருப்பத்தூா்-புதுப்பேட்டை அணுகு சாலை, சேலம்-கிருஷ்ணகிரி அணுகு சாலை உள்ளிட்ட சாலைகளும் சேதமடைந்துள்ளன.

தற்போது தொடா் மழை பெய்து வருவதால் சாலைகளில் ஏற்பட்ட குழிகளில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, ஆசிரியா் நகா் முதல் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி அணுகு சாலை வரை சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT