திருப்பத்தூர்

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி தொழிலாளி பலி

ஆலங்காயம் அருகே இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

ஆலங்காயம் அருகே இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (45) தொழிலாளியான இவா் திங்கள்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் ஆலங்காயத்திலிருந்து புறப்பட்டு பூங்குளம் நோக்கி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது நரசிங்கபுரம் அருகில் வளைவு பகுதியில் சென்றபோது திடீரென வாகனம் நிலைதடுமாறி சாலை ஓரம் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குமரேசன் பலத்த காயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT