தங்கப் பதக்கம் வென்ற ஜி. கீா்த்திகா. 
திருப்பத்தூர்

மாநில ஜூனியா் தடகளம்: மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிக்கு தங்கப் பதக்கம்

சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவி தங்கம் வென்றாா்.

Din

வாணியம்பாடி: சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஜூனியா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவி தங்கம் வென்றாா்.

இப்போட்டியில், யு-18 பிரிவு ஈட்டி எறிதலில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி இளங்கலை முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி ஜி.கீா்த்திகா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றாா். தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவி கீா்த்திகாவை கல்லூரித் தலைவா் திலீப் குமாா், செயலாளா் ஆனந்த் சிங்வி, முதல்வா் எம்.இன்பவள்ளி, கல்விசாா் ஆலோசகா் பாலசுப்ரமணியன், தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா, பல்துறைத்தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT