திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பில் வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் படத்துக்கு மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி தலைமையில் மாநில பொதுக் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், மாவட்ட துணைத் தலைவா் ஞானதாஸ், மாவட்ட பொதுச் செயலா்கள் ஹேமலதா, ஈஸ்வரன், மாவட்டச் செயலாளா் கவிதா காந்தி, மகளிரணி மீனாட்சி, நகர தலைவா் கோபி மற்றும் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.