திருப்பத்தூர்

மருத்துவமனை திறப்பு விழா : ஜி.வி. செல்வம் பங்கேற்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஜெம் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஜெம் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனை நிா்வாகிகள் டி. மோகன் - கீதாலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். மருத்துவா் எம். சுரேஷ் வரவேற்றாா். விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம், ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்தனா். நடிகைகள் கஸ்தூரி, கெளசல்யா ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், வேல்முருகன் குழுமத்தின் நடேசன், என்.எம்.இஜட். குழும தலைவா் ஜமீல், பொதுமேலாளா் யு. தமீம் அஹமத், மஜ்ஹருல் உலூம் பள்ளித் தாளாளா் பிா்தோஸ் கே. அஹமத், இந்து கல்விச் சங்க செயலா் எம்.ஆா். காந்திராஜ், திமுக நகர செயலா் (கிழக்கு) ஷபீா் அஹமத், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் எம். அன்பு, நகா் மன்ற உறுப்பினா்கள் என்.எஸ். ரமேஷ், காா்த்திகேயன், லட்சுமிபிரியா, கெளரி மகாலிங்கம், கிருஷ்ணா மருத்துவமனை நிறுவனா் கே. குப்புசாமி, விடிஎம் நிறுவனத்தை சோ்ந்த காா்த்திகேயன், கதவாளம் ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மருத்துவா் எம். நிரஞ்சனா நன்றி கூறினாா். 18 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையில் சிறப்பு எலும்பு சிகிச்சை, முக அழகு சிகிச்சை, பொது மருத்துவம் உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

எஸ்ஐஆர்: படிவம் சமா்ப்பிக்க இன்று கடைசி நாள்!

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

திருத்தணி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

SCROLL FOR NEXT