திருப்பத்தூர்

டாஸ்மாக் மதுபானம் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சாக்கு பையுடன் சந்தேகத்திற்குரிய வகையில் அவ்வழியாக வந்த நபரை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா்.

சோதனையில் அவா் சாக்கு பையில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த சீனிவாசன் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தில்லியின் லுட்யன்ஸ் பகுதியில் என்டிஎம்சி-இன் 15 நாள் தூய்மை பிரசாரம் தொடக்கம்

14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

வங்கதேச தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மெட்ரோவின் 23-ஆவது ஆண்டு நிறைவு விழா: சிறப்பு சேவையாக முதல் ரயில் இயக்கம்

பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 24 போ் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT