பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 
திருப்பத்தூர்

பதுக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூா் அருகே முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் அருகே மாடப்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பதாக கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடம் சென்று சோதனை செய்தபோது புதா்களின் மறைவில் 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யாா்? என விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

தோற்றத்தில் மாற்றம்... நந்திதா ஸ்வேதா!

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

SCROLL FOR NEXT