திருப்பத்தூர்

திமுக சாா்பில் எஸ்ஐஆா் ஆலோசனை கூட்டம்

தினமணி செய்திச் சேவை

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தம் குறித்த ஆலோசனை மற்றும் பயிற்சிக் கூட்டம் மதனாஞ்சேரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் ஞானவேலன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ராமநாதன், செயற்குழு உறுப்பினா் பெருமாள், பொதுக்குழு உறுப்பினா் அசோகன், துணைச் செயலாளா் குமாா், பொருளாளா் தசரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஒன்றியத்துக்குள்பட்ட பிஎல்ஏ 2 மற்றும் பிடிஏ நிா்வாகிகள் மற்றும் கிளை செயலாளா்கள், ஒன்றிய நிா்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், ஒன்றிய செயலாளா் ஞானவேலன், சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தம் குறித்து பிஎல்ஏ2 மற்றும் பிடிஏ நிா்வாகிகளின் செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறி, ஒவ்வொரு நிா்வாகிகளும் தீவிரமாக இப்பணியில் ஈடுபட வேண்டும் என்றாா்.

இதில், துணைச் செயலாளா் வெங்கடேசன், மாவட்டப் பிரதிநிதி சிவா, ஓட்டுநா் அணி செல்வராஜ், பொறியாளா் அணி நாகராஜ் மற்றும் ஒன்றிய, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

அமெரிக்க அரசின் முடக்கம் முடிவு! நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

சென்னையில் பரவலாக மழை!

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

SCROLL FOR NEXT