திருவள்ளூர்

இரு ஏடிஎம் மையங்களில்கொள்ளை முயற்சி

சோழவரம் அருகே இரண்டு ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில்  ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

DIN


சோழவரம் அருகே இரண்டு ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில்  ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காந்தி நகர் பகுதியில் பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கியின் இரண்டு ஏடிஎம் மையங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த இரு ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். 
அப்போது, ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எச்சரிக்கை மணி ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். எச்சரிக்கை ஒலியைக் கேட்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். 
இதுகுறித்து சோழவரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT