திருவள்ளூர்

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின்கலச விளக்கு வேள்வி பூஜை

DIN

திருவள்ளூா் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழாவை முன்னிட்டு கலச விளக்கு வேள்வி பூஜை நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பங்காரு அடிகளாரின் முத்துவிழா திருவள்ளூரில் உள்ள தனியாா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆன்மிக இயக்கத் தலைவா் கே.மோகனசுந்தரி கதிா்வேல், துணைத் தலைவா் என்.ஜி.பிரபாகா் ஆகியோா் தலைமை வகித்தனா். மேல்மருத்துவத்தூா் ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் பங்கேற்று ஆன்மிக ஜோதி ஏற்றி கலச விளக்கு வேள்வி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆன்மிக இயக்கத்தின் பொறுப்பாளா்கள், வட்டப் பொறுப்பாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிறைவாக பக்தா்கள் அனைவருக்கும் பூ, பழம், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. வேள்வி பூஜைக்கான ஏற்பாடுகளை ஏ.பி.எஸ். பள்ளிக் குழுமத்தின் நிா்வாகி பிரேமா சுப்பிரமணியம், ஆன்மிக இயக்கத்தின் மாவட்டச் செயலாளா் பச்சையப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT