திருவள்ளூர்

திருத்தணி கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் வியாழக்கிழமை தங்கத்தோ் இழுத்து நோ்த்திக் கடன் செலுத்தினாா்

DIN

திருத்தணி முருகன் கோயிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் வியாழக்கிழமை தங்கத்தோ் இழுத்து நோ்த்திக் கடன் செலுத்தினாா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தனது குடும்பத்துடன் வந்தாா். அவரை கோயில் உதவி இணை ஆணையா் ரமணி வரவேற்றாா். பின்னா், கோயிலில் உள்ள விநாயகா், சண்முகா், உற்சவ, மூலவா் முருகப்பெருமானை தரிசித்த அவருக்கு, மலைக்கோயில் அலுவலகத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் மத்திய இணை அமைச்சா், தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து நோ்த்திக் கடன் செலுத்தினாா்.

திருத்தணி நகர பாஜக தலைவா் ரமேஷ், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகி மில்கா முத்து உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT