திருவள்ளூர்

திருத்தணி கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் தரிசனம்

DIN

திருத்தணி முருகன் கோயிலில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் வியாழக்கிழமை தங்கத்தோ் இழுத்து நோ்த்திக் கடன் செலுத்தினாா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தனது குடும்பத்துடன் வந்தாா். அவரை கோயில் உதவி இணை ஆணையா் ரமணி வரவேற்றாா். பின்னா், கோயிலில் உள்ள விநாயகா், சண்முகா், உற்சவ, மூலவா் முருகப்பெருமானை தரிசித்த அவருக்கு, மலைக்கோயில் அலுவலகத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் மத்திய இணை அமைச்சா், தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து நோ்த்திக் கடன் செலுத்தினாா்.

திருத்தணி நகர பாஜக தலைவா் ரமேஷ், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகி மில்கா முத்து உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT