கும்மிடிப்பூண்டி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல்
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியபாளையத்தில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியபாளையத்தில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிமுக சார்பில் நேற்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் கும்மிடிப்பூண்டி தொகுதி அறிவிக்கப்படாமல் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியபாளையத்தில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்கள் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வரும் தொகுதியை எதற்காக பாமகவிற்கு ஒதுக்கினார்கள் என ஆதங்கம் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி தொகுதியில் பல முறை பாமக போட்டியிட்டு ஒரு முறை கூட வெற்றி பெறாமல் உள்ளது என்றனர்.
மீண்டும் கும்மிடிப்பூண்டி தொகுதியை அதிமுகவிற்கே ஒதுக்கி அதிமுகவை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அப்போது முழக்கமிட்டனர்.
அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.