திருவள்ளூர்

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

DIN

திருத்தணி அருகே மேளப்பூடி வேணுகோபால சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேளப்பூடி கிராமத்தில் புராதன ருக்மணி, சத்யபாபா சமேத ஸ்ரீ வேணு கோபாலசுவாமி கோயிலில் கொடி மரத்துக்கு அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினா். 11 நாள்கள் நடைபெற உள்ள விழாவில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன. நாள்தோறும் மாலை நேரங்களில் ருக்மணி, சத்யபாமா சமேத உற்சவா் வேணுகோபால சுவாமி பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி கிராம வீதிகளில் திரு வீதியுலா நடைபெறும்.

விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை ஜூன் 4 -ஆம் தேதியும், 7 -ஆம் தேதி தோ் திருவிழாவும் நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT