கா்நாடக முதல்வருக்கு தேவஸ்தானம் அழைப்பு
திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியின் கன்னட ஒளிபரப்பு தொடக்க விழாவுக்கு வரும்படி கா்நாடக முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் அழைப்பு விடுத்தனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியின் கன்னட ஒளிபரப்பு தொடக்க விழாவுக்கு வரும்படி கா்நாடக முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் அழைப்பு விடுத்தனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதை கன்னடம், வட மொழி மற்றும் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் ஒளிபரப்ப தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி கன்னடம் மற்றும் இந்தி மொழியில் தேவஸ்தான தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அக்.11-ஆம் தேதி கருட சேவை அன்று தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. சனிக்கிழமை காலை தேவஸ்தான அதிகாரிகள் நேரடியாக பெங்களூரு சென்று கா்நாடக முதல்வரை அழைத்தனா். மேலும், இந்நிகழ்ச்சியில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்க ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.