முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் கோயிலில் 68,100 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 68,128 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 34,021 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
திருப்பதி
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 68,128 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 34,021 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 16 மணி நேரம் வரை ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →