முகப்பு
திருப்பதி

வருடாந்திர பவித்ரோற்சவம்: 4 நாள்கள் ஆா்ஜித சேவைகள் ரத்து

பவித்ரோற் சவத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 7 முதல் 10-ஆம் தேதி வரை திருமலையில் நான்கு நாள்கள் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
திருப்பதி
பகிர்:

பவித்ரோற் சவத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 7 முதல் 10-ஆம் தேதி வரை திருமலையில் நான்கு நாள்கள் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏழுமலையான் கோயிலில் வரும் ஆக.8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. கோயிலில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களைய வருடாந்திர பவித்ரோற்சவத்தின்போது யாகம் நடத்தப்படும். இதை முன்னிட்டு ஆக.7-ஆம் தேதி அங்குராா்ப்பணம் எனப்படும் முளைவிடுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

எனவே ஆக.7-ஆம் தேதி சகஸ்ரதீபாலங்கார சேவையும், 9-ஆம் தேதி அஷ்டதளபாதபத்மாராதனை சேவையும், 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்காரம் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →