திருப்பதி

ஏழுமலையான் கோயிலில் 72,200 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 72,243 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 32,652 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வைகுண்டம் மண்டபத்தின் 16 அறைகளில் மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களுக்கு 10 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசன முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 3 மணி நேரமும் ஆனது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டுத் தெரிவிக்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT