திருமலையில் பௌா்ணமி கருட சேவை
திருமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
திருமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.
திருமலையில் மாதந்தோறும் பௌா்ணமி இரவு கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையை மாடவீதிகளில் கூடியிருந்த பக்தா்கள் கண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
Advertisement