திருவண்ணாமலை

செய்யாறு அருகே பைக்குகள் மோதி விபத்து: மேலும் ஒருவர் சாவு

DIN

செய்யாறு அருகே கடந்த டிசம்பர் 31-ஆம் 3 பைக்குகள் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் வியாழக்கிழமை இறந்தார்.
செய்யாறு - ஆற்காடு சாலையில் பைங்கினர் கிராமம், பாரிநகர் பகுதியில் கடந்த டிசம்பர் 31 -ஆம் தேதி இரவு 3 பைக்குகள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் யுவராஜ் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பரான ஜெயசூர்யா மற்றும் மற்றொரு பைக்கில் எதிரே வந்து மோதிக்கொண்ட செய்யாறு கொடநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (26) (படம்), நரேந்திரன் (28), ரிஷ்வன் ஆகியோர் பலத்த காயமடைந்து செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இவர்களில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சரவணன் வியாழக்கிழமை இறந்தார். விபத்து குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை 
மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT