திருவண்ணாமலை

செய்யாறு அருகே பைக்குகள் மோதி விபத்து: மேலும் ஒருவர் சாவு

செய்யாறு அருகே கடந்த டிசம்பர் 31-ஆம் 3 பைக்குகள் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் வியாழக்கிழமை இறந்தார்.

DIN

செய்யாறு அருகே கடந்த டிசம்பர் 31-ஆம் 3 பைக்குகள் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் வியாழக்கிழமை இறந்தார்.
செய்யாறு - ஆற்காடு சாலையில் பைங்கினர் கிராமம், பாரிநகர் பகுதியில் கடந்த டிசம்பர் 31 -ஆம் தேதி இரவு 3 பைக்குகள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் யுவராஜ் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பரான ஜெயசூர்யா மற்றும் மற்றொரு பைக்கில் எதிரே வந்து மோதிக்கொண்ட செய்யாறு கொடநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (26) (படம்), நரேந்திரன் (28), ரிஷ்வன் ஆகியோர் பலத்த காயமடைந்து செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இவர்களில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சரவணன் வியாழக்கிழமை இறந்தார். விபத்து குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை 
மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT