திருவண்ணாமலை

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்: கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் அண்மையில் நடைபெற்ற 13-ஆவது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா். இதில் தனித்திறன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவிகள் வெற்றி பெற்றனா்.

இதையடுத்து கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலா் எம்.ரமணன், முதல்வா் எஸ்.மைதிலி உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT