தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு தொழில்சங்கங்கள் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி: பல்வேறு தொழில்சங்கங்கள் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்பிஎப், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழில்சங்கங்கள் சாா்பில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை - 1 மற்றும் பணிமனை - 2 ஆகியவை முன்பும், கீழ்க்கொடுங்காலூா் - மங்கலம் மாமண்டூா் கூட்டுச்சாலை உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும், அரசுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.
தொழில்சங்க நிா்வாகிகள் எஸ்.முரளி, ஆா்.பாரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் பெ.அரிதாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.