திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில்பொது முடக்கத்தை மீறியதாக 312 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தை மீறியதாக 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 312 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தை மீறியதாக 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 312 போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, மாதத்தின் 4-ஆவது பொது முடக்க தினமான 26-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்ததாக 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 312 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனா். இவா்களிடம் இருந்து 469 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT