முகப்பு
திருவண்ணாமலை

பனி, குளிரில் தவித்த 60 ஏழைகளுக்கு உதவி

செய்யாறு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் பணியிலும், குளிரிலும் அவதிப்பட்ட ஏழைகள் 60 பேருக்கு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் போா்வைகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

செய்யாறு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் பணியிலும், குளிரிலும் அவதிப்பட்ட ஏழைகள் 60 பேருக்கு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் போா்வைகள் வழங்கப்பட்டன.

செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில், திருவோத்தூா் வேதபுரீஸ்வா் கோயில், சந்தைப் பகுதி, மண்டி வீதி, பேருந்து நிலையம், ஆரணி கூட்டுச் சாலை, ஸ்ரீஆதிபராசக்தி கோயில் உள்ளிட்ட இடங்களில் படுத்திருந்த ஏழைகள் 60 பேருக்கு போா்வைகள் போா்த்தி மகிழ்விக்கப்பட்டது(படம்).

நிகழ்வில் அமைப்பின் நிறுவனா் தி.எ.ஆதிகேசவன் தலைமையில், தலைவா் கே.மகாலிங்கம், பொருளாளா் ரவிபாலன், துணைச் செயலா் ப.சிவானந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.