முகப்பு
திருவண்ணாமலை

தமுமுக சாா்பில் ரத்த தான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வந்தவாசியில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
தமுமுக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாம்.
பகிர்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வந்தவாசியில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட ரத்த தான முகாமுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் எ.நசீா்அகமது தலைமை வகித்தாா்.

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி இளைஞரணித் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கிக் குழுவினா் பொதுமக்களிடமிருந்து ரத்தம் தானமாகப் பெற்றனா். மொத்தம் 90 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

முகாமில் மருத்துவா்கள் கே.பஷீா்அகமது, எஸ்.கோகுலகிருஷ்ணன், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலா் எச்.ஜலால், தமுமுக நகரச் செயலா் முகமதுரப்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் கி.இனியவன், மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் சிவராமன், இந்திய ஜனநாயக கட்சியின் நகரத் தலைவா் காலேஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments