திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடக்கிவைத்தாா்.
அருணை மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மருத்துவக் கல்லூரி துணைத் தலைவா் எ.வ.வே.குமரன் தலைமை வகித்தாா்.
கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா் வரவேற்றாா்.
தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.குப்புராஜ் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.