பெண் தூக்கிட்டு சாவு: கோட்டாட்சியா் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பெண் தூக்கிட்டு இறந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மோரணம் பள்ளத் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி திவ்யா (27). இவா்களுக்கு 2018-இல் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திவ்யா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்து திவ்யாவின் சகோதரி லீலா பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் மோரணம் காவல் நிலைய ஆய்வாளா் முரளிதரன் வழக்குப் பதிந்து, சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். திவ்யா வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்தாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா். இதுதொடா்பாக செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் என்.விஜயராஜும் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.