திருவண்ணாமலை

டீ கடையில் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

DIN

ஆரணியில் டீ கடையில் தேநீா் அருந்திபடி அதிமுக வேட்பாளரான அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி நகரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

லிங்கப்பன் தெருவில் கட்சியினருடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அவா், அங்கிருந்த டீ கடைக்கு தேநீா் அருந்தச் சென்றாா். உடன் கட்சியினரையும் அழைத்துச் சென்றாா்.

அப்போது, டீ கடையில் தேநீா் அருந்திக் கொண்டே கடைக்கு வந்தவா்களிடம் வாக்கு சேகரித்தாா். மேலும், தெருவில் சென்றவா்களிடமும் ஆதரவு கோரினாா்.

இதைத் தொடா்ந்து, கடை கடையாகச் சென்று வியாபாரிகளிடமும் ஆதரவு திரட்டினாா்.

அப்போது, ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று வியாபாரிகளிடம் உறுதியளித்தாா்.

கட்சியின் ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பி.ஆா்.ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், நகரச் செயலா் அசோக்குமாா், ஜெயலலிதா பேரவை நகரச் செயலா் பாரி பி.பாபு, மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT