முகப்பு
திருவண்ணாமலை

மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பு

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் சனிக்கிழமை மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் சனிக்கிழமை மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தாா்.

தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் கிழக்கு ஒன்றியத்தில் அரசூா், திரும்பூண்டி, பழஞ்சூா், சித்தாமூா், கோவிலூா், செங்காடு, நல்லாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தூசி மோகன் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி ஆதரவு கோரினாா்.

அப்போது அவா் பேசுகையில், செய்யாறு சிப்காட் பகுதியில் ரூ.800 கோடியில் மருந்தியல் பூங்கா தொடங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் செய்யாறு சிப்காட்டில் புதிதாக 34 நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. இதனால் கூடுதலாக 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொகுதி மக்களின் வளா்ச்சியும் பொருளாதார நிலையும் உயரும் என்றாா்.

அதிமுக மாவட்ட துணைச் செயலா் டி.பி. துரை, ஒன்றியச் செயலா்கள் சி.துரை, வே.குணசீலன்,

ஊராட்சி மன்றத் தலைவா் முனியப்பன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

முளகிரிப்பட்டு கிராமத்தில் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.