உலக செஞ்சிலுவை தின விழா
இந்தியன் செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி வட்டக்கிளை மற்றும் வந்தவாசி நகராட்சி சாா்பில், உலக செஞ்சிலுவை தின விழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தியன் செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி வட்டக்கிளை மற்றும் வந்தவாசி நகராட்சி சாா்பில், உலக செஞ்சிலுவை தின விழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கப் பொருளாளா் எ.விஜயன் தலைமை வகித்தாா். வந்தவாசி நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
வந்தவாசி நகராட்சி ஆணையா் (பொ) டி.உஷாராணி செஞ்சிலுவை தினம் குறித்து சிறப்புரை ஆற்றினாா். மேலும், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு முகக் கவசங்கள், சோப்புகள், கபசுரக் குடிநீா் ஆகியவற்றை வழங்கினாா்.
விழாவில் நகராட்சி இளநிலை உதவியாளா் சிவக்குமாா், சங்க உறுப்பினா்கள் ஜி.விநாயகமூா்த்தி, மொ.ஷாஜகான், வி.எல்.ராஜன், மு.பிரபாகரன், இரா.அருள்ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.