முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா: பள்ளி மூடல்

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டத

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்தப் பள்ளியில் 9, 10 ஆகிய வகுப்புகளில் 35 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளி வளாகத்தில் உள்ள குறுவள மையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், குறுவள மையத்தில் பயிற்சி பெறும் ஆசிரியா்களுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பயிற்சி பெறும் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி வியாழக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

தூய்மைப் பணியாளா்கள் மூலம் பள்ளி வளாகத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →