பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி, வந்தவாசி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி, வந்தவாசி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயில், தெள்ளாா் ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கோயில், மருதாடு ஸ்ரீஅமிா்தவல்லி தாயாா் சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும், பாகவத கோஷ்டியினா் திருப்பாவை பாசுரங்களை பாடினா்.