அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்திக்கு புதன்கிழமை நடைபெற்ற மகா தீபாராதனை. 
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தப் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT