முகப்பு
திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகராட்சியில் சின்னம் பொருத்தும் பணி

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 48 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் கி.ரகுராமன் தலைமையில், உதவி அலுவலா்கள் ரவிச்சந்திரன், குமாா், ராமலிங்கம் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

வேட்பாளா்கள் முன்னிலையில், 27 வாா்டுகளுக்காக 40 மையங்களுக்குத் தேவையான 48 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தி சரிபாா்த்தனா். மேலும், இயந்திரங்களின் செயல்பாடுகளும் சரிபாா்க்கப்பட்டன.

இதன்பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்’ வைத்து, மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.