முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வந்தவாசி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

வந்தவாசி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊரக வளா்ச்சி- ஊராட்சித் துறை சாா்பில் வந்தவாசி ஒன்றியத்துக்குள்பட்ட ஆராசூா், வங்காரம் ஆவணவாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆராசூா் ஊராட்சியில் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா். பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வங்காரம் கிராமத்திலிருந்து கயநல்லூா் வழியாக ஆவணவாடி கிராமம் வரை ரூ.82.35 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலையின் தரத்தை அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.வி.மூா்த்தி, இரா.குப்புசாமி, பொறியாளா் ரவிமலரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →