முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரி மாணவிகள் மிதிவண்டிப் பேரணி

உலக மிதிவண்டி தினத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணி நடத்தினா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

உலக மிதிவண்டி தினத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணி நடத்தினா்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் தலைமை வகித்தாா்.

கல்லூரிச் செயலா் எம்.ரமணன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி கொடியசைத்து பேரணியை தொடக்கிவைத்தாா்.

கல்லூரியிலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் டி.பாரதி, ஏ.கலைவாணி மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →