கூடுதல் பேருந்து இயக்கக் கோரி கல்லூரி மாணவிகள் சாலை மறியல்
செய்யாறு - ஆரணி வழித் தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செய்யாறு - ஆரணி வழித் தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியா்கள் படித்து வருகின்றனா். செய்யாறு - ஆரணி வழித்தடத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டதாம்.
இதனால் பாதிப்படைந்த கல்லூரி மாணவிகள், செய்யாறு - ஆரணி வழித்தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, செய்யாறு புறவழிச் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்யாறு போலீஸாா் , மாணழிகளை சமரசம் செய்தனா். பின்னா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அலுவலா்களிடம் தொடா்பு கொண்டு, பேருந்தை வரவழைத்து, மாணவிகளை ஏற்றிஅனுப்பிவைத்தனா்.