தொற்றா நோய் கண்டறியும் சிறப்பு முகாம்
செய்யாறை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றாநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
செய்யாறை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்றாநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வியாழன், சனிக்கிழமையில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில், 18 வயதுக்கு மேற்பட்டோா் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம். நோய்களை அறிந்து, அவா்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை மக்களைத் தேடித் திட்ட மருத்துவப் பணியாளா்கள் நேரடியாகச் சென்று வழங்கப்படுகின்றனா்.
நாள்தோறும் 50 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் மே 31-ஆம் தேதி வரையில் நடைபெறும் முகாமை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவா் யோகேஸ்வரன் தெரிவித்தாா்.