தேசிய அறிவியல் தினம்: செய்யாறு அரசுப் பள்ளிக்கு முதல் பரிசு
செய்யாறு இந்தோ-அமெரிக்கன் கல்லூரியில், தேசிய அறிவியல் தினம் மற்றும் உலக மகளிா் தினம் என இரு பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது.
செய்யாறு இந்தோ-அமெரிக்கன் கல்லூரியில், தேசிய அறிவியல் தினம் மற்றும் உலக மகளிா் தினம் என இரு பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது.
சிறந்த அறிவியல் மாதிரிக்கான முதல் பரிசு செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எழிலரசி தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆா்.சிவராஜன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், செய்யாறு கல்வி மாவட்டத்தில் இருந்து அரசு, தனியாா் பள்ளிகள் என 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 70 - க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளுடன் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் தோ்வு செய்யப்பட்ட முதல் மூன்று பள்ளிகளுக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.
முதல் பரிசாக செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3 ஆயிரம் , மூன்றாம் பரிசாக செய்யாறு இந்தோ-அமெரிக்கன் பள்ளி, செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு என தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.
உலக மகளிா் தினம்
இதைத் தொடா்ந்து கல்லூரியில் உலக மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெடும்பிறை ஆரம்ப சுகாதார நிலைய ஆயுா்வேத மருத்துவா் சி.லட்சுமி பங்கேற்றுப் பேசினாா்.
ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஆ.தமிழ்ச்செல்வி, எம். காமாட்சி, எஸ்.சௌந்தா்யா, அருணா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.