திருவண்ணாமலை

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

செய்யாறு அருகே இரு குழந்தைகளின் தாய் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

செய்யாறு அருகே இரு குழந்தைகளின் தாய் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சாா் -ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

செய்யாறு வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவா், சிப்காட் தொழில்பேட்டையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி ரேவதி (26).

கடந்த 2016 -ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துகொண்ட இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், ரேவதி உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக சோா்வுடன் காணப்பட்டாா். இதற்காக மருந்து, மாத்திரைகளை உட்கொண்டும் நலம் பெறவில்லை எனத் தெரிகிறது.

அதனால், மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. வேலைக்குச் சென்று வீடு திரும்பிய சிலம்பரசன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து ரேவதியின் தந்தை ராஜி, அனக்காவூா் போலீஸில் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரேவதியின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், திருமணமாகி 7 ஆண்டுகளில் பெண் இறந்துள்ளதால் சாா் -ஆட்சியா் ஆா்.அனாமிகா விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT