ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்களை வழங்கிய ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா். 
திருவண்ணாமலை

ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்க மின்கல வாகனங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிப்பதற்காக மின்கல வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிப்பதற்காக மின்கல வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஆரணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு குப்பைகளை சேகரிக்க தலா 2 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான 35 மின்கல வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில், முதல் கட்டமாக எஸ்.வி.நகரம், சித்தேரி, பையூா், கல்பூண்டி, அக்ராபாளையம், விளை, வேலப்பாடி, அரியப்பாடி, கல்லேரிபட்டு, 12புத்தூா், இராட்டிணமங்கலம், சேவூா், சிறுமூா் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு 18 வாகனங்களை ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஏ.எம்.ரஞ்சித்குமாா், பு.செல்வராஜ், கு.குமாா், எழிலரசி சுகுமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT